மேலும்

உயர்மட்டப் பிரதிநிதியை கொழும்புக்கு அனுப்புகிறார் ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா பொதுச்செயலரின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்படுவது ஆறு மாதங்களுக்குப் பிற்போட முடிவு எடுக்கப்பட்ட நிலையில், ஐ.நா உயர்பிரதிநிதியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரின் உயர்மட்ட அரசியல் பிரதிநிதியான ஜெப்ரி பெல்ட்மன், வரும் சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார்.

அவர், மூத்த அரசாங்க அதிகாரிகள், அரசியல்கட்சிகள், சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

“இது அவரது முதல் சிறிலங்கா பயணம்.  சிறிலங்கா தலைவர்களுடன் பரஸ்பரம் கரிசனைக்குரிய பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடுவதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்” என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாம் அறிந்தவரையில், அவர் கொழும்புக்கு மட்டுமே செல்லத் திட்டமிட்டுள்ளார் என்றும், யாழ்ப்பாணம் செல்லும் திட்டம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *