மேலும்

யோசித ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான, லெப். யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக அளித்த பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா கடற்படைத் தளபதி நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவில் புதிய நம்பிக்கை – அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

சிறிலங்காவில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மகிந்த

சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்த பின்னர், தமக்கு எதிராகவும், தமது குடும்பத்தினருக்கு எதிராகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கிறது சீனா

சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஊடகங்களின் மூலம் சிறிலங்காவுக்கு சீனா அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

வடக்கில் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் கோத்தாவின் புதிய சதித் திட்டம்

சிறிலங்கா இராணுவத்தின் ஒரு குழுவினரைப் பயன்படுத்தி அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்த சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இராஜதந்திர மரபை மீறினார் ரணில்

இராஜதந்திர மரபுகளை மீறி, கொழும்பில் நேற்று நடந்த இந்தியாவின் குடியரசு நாள் வரவேற்பு விழாவில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு விசாரணை – சிறிலங்கா திட்டம்

சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு படையெடுக்கவுள்ள அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்டங்கள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவை எதிர்கொள்வதற்கான பாரிய காய்நகர்த்தலில் சிறிலங்கா

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான பாரிய இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இறங்கியுள்ளது.

புதிய கட்சி, கூட்டணி அமைக்கும் அழைப்பை நிராகரித்தார் மகிந்த

தாம் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணி ஒன்றைத் துவங்கவோ போவதில்லை என்று சிறிலங்காவின்  முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.