ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தலைவர்கள் இன்று காலை மீண்டும் முக்கிய கூட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் சுசில் பிரேமஜெயந்த, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பாரா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
நேற்றிரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டும் திட்டம் நீதிமன்றத் தடை மூலம் முறியடிக்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.