மேலும்

முன்னைய அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் கடமை – சீனா

இன்னொரு நாட்டுடன் முன்னைய அரசாங்கம், செய்து கொண்ட இருதரப்பு உடன்பாட்டை மதிக்க வேண்டியது ஜனநாயக நாடு ஒன்றின் கடப்பாடு என்று சீனா தெரிவித்துள்ளது.

மீண்டும் அரசியலுக்கு வருகிறார் மகிந்த – நுகேகொட கூட்டத்தில் சூளுரை

கடந்த மாதம் அதிபர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குத் திரும்பப் போவதாக சூளுரைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டத்தினால் சீனாவுடனான உறவை முறிக்க முடியாது – நாடாளுமன்றில் ரணில்

1.5 பில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மாணிக்க சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, அமைச்சரவை அனுமதியின்றி, சட்ட நடைமுறைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் மைத்திரிக்கு சங்கடம்: திறக்க மறுத்தது கருவறை தங்கக் கதவு – பூட்டை உடைத்து தரிசனம்

திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்க ரணில் உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்திய – சிறிலங்கா அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

சிறிலங்காவில் அதிகரித்துள்ள சீனாவின் செல்வாக்கை இல்லாதொழித்தல் என்பது குறுகிய காலத்தில் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இலகுவான காரியமல்ல.

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ் கொழும்பில் தடுத்து வைப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த, இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகை சிறிலங்காவில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணை கவனமாக மதிப்பீடு செய்யப்படும்- ஐ.நா

சிறிலங்காவில் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா கவனமாக மதிப்பீடு செய்யும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹன் ஹக் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாம்

சிறிலங்காவின் எல்லா மக்களுக்கும் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், மற்றும் மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிடிக்குள் சிக்காமல் நழுவினார் மைத்திரி

சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், சீனாவையோ, இந்தியாவையோ சார்ந்திருக்கப் போவதில்லை என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.