மேலும்

பிரிவு: செய்திகள்

சமூக கட்டமைப்பின் சீர்குலைவே யாழ்.வன்முறைகளுக்கு மூலகாரணம் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்

புங்குடுதீவில் மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கும், போருக்குப் பின்னர்  ஏற்பட்டுள்ள பாரம்பரிய சமூக நிர்வாக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முறிவே காரணம் என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மாணவியின் சடலத்தின் மீது அரசியல் ஆதாயம் தேடமுனையும் மகிந்த – அமைச்சர் விஜேதாச கண்டனம்

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் மீது இனவாத அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான முயற்சியில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாக, நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்காவில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தமிழ்நாடு முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா

தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கவுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்து, அவர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றுகாலை தனது பதவியை விட்டு விலகினார்.

வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தினால் முற்றாக முடங்கியது மட்டக்களப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்று முற்றிலும் செயலிழந்தன.

யாழ்ப்பாண வன்முறைகளை புலிகளின் பாணி என்கிறார் மகிந்த

யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து சிறிலங்கா காவல்துறையினர் கவனமாக இருக்க வேண்டும் என்றும், முன்னரும் இதுபோன்ற செயற்பாடுகள் தான் விடுதலைப் புலிகள் எழுச்சி பெறக் காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சொந்த வீடுகளுக்குச் செல்ல ஏக்கத்துடன் காத்திருக்கும் வலி.வடக்கு மக்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பளை வீமன்காமம் பகுதியிலுள்ள வி.யோகேஸ்வரனின் காணி மற்றும் வீடு போன்றவற்றை சிறிலங்கா இராணுவம் மீளக்கையளித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகின்றன. ஆயினும் தனது சொத்துக்கள் தன்னிடம் மீண்டும் கிடைத்துவிட்டன என்பதை இவரால் நம்பமுடியவில்லை.

கெட்டவார்த்தையால் ரணிலைத் திட்டினார் வாசுதேவ – எதிர்க்கட்சியினர் கைதட்டி வரவேற்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அமர்வின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பைத்தியக்காரன் என்று கூறி கெட்டவார்த்தையால் திரும்பத் திரும்ப திட்டினார்.

யாழ்.நகரில் கைது செய்யப்பட்ட 130 பேருக்கும் விளக்கமறியல்- அனுராதபுர சிறையில் அடைப்பு

யாழ்.நீதிமன்ற வளாகப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 130 பேரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வித்தியா கொலையைக் கண்டித்து கடையடைப்பு- முற்றாக முடங்கியது வவுனியா

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரியும், வவுனியா மாவட்டத்தில் இன்று முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.