2000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குகிறது சிறிலங்கா – 90 வீதமானோரும் சிங்களவர்களே
சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமை பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2000 பேரில், 90 வீதமானோர் சிங்களவர்களே என்று சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
“இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த 2000 பேருக்கு வரும், 17ஆம் நாள் நடக்கவுள்ள நிகழ்வில் சிறிலங்கா அிதிபர் மைத்திரிபால சிறிசேன, குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.
பெரும் எண்ணிக்கையாளவர்கள் இதற்கு விண்ணப்பித்த போதும், 2000 பேருக்கு, இரட்டைக் குடியுரிமை வழங்க சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அனுமதி அளித்திருந்தனர்.
இவர்களில் 90 வீதமானோர் சிங்களவர்களாவர். இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 10 வீதமானோரே தமிழர், மற்றும் முஸ்லிம்களாவர்.
அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வசிப்போரே அதிகளவில் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.