மேலும்

மர்மப்பொருள் விண்வெளியில் எரிந்து போனதா?

WT1190F-watching (1)விண்வெளியில் இருந்து இன்று காலையில் சிறிலங்காவுக்குத் தெற்கேயுள்ள கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்மப்பொருள், இன்னமும் விழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

WT1190F எனப் பெயரிடப்பட்ட இந்த மர்மப் பொருள், இன்று காலை 11.50 மணியளவில் சிறிலங்காவுக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டது.

இதையடுத்து, மாத்தறை மாவட்டத்தில் உள்ள தங்காலையில் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கூடியிருந்து அவதானித்து வந்தனர்.

எனினும், இந்த மர்மப்பொருள் பூமியை வந்தடையவில்லை. இது வானிலேயே எரிந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

WT1190F-watching (1)WT1190F-watching (2)WT1190F-watching (3)

எதிர்பார்க்கப்பட்டது போல வளிமண்டலத் தொகுதிக்குள் எந்தப் பொருளும் நுழையவில்லை என்று ஐரோப்பிய விண்வெளி முகவரமைப்பின் விஞ்ஞானிகளுக்கு உதவும் குழுவில் இடம்பெற்றுள்ள கலாநிதி மகாநாம தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *