மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்க்க தருணம் பார்த்துக் காத்திருக்கும் மகிந்த விசுவாசிகள்

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், இது தனது அயல்நாடுகள் தொடர்பில் அதிகளவில் அக்கறை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் நடைபெறும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் இதற்கு மாறுபட்டதாகக் காணப்படுகிறது.  

புலிகளை நினைவு கூர்ந்தாராம் விக்னேஸ்வரன் – ஞானசார தேரர் கூறுகிறார்

நீதிமன்றம் விதித்த தடைஉத்தரவை மீறி, விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

மைத்திரியை புங்குடுதீவு செல்ல விடாமல் தடுத்த அதிபர் பாதுகாப்புப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, புங்குடுதீவுக்குச் செல்வதற்கு, சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு, மண்டூரில் இன்று காலை இனந்தெரியாத நபர்களால், அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்றும், 44 வயதான சச்சிதானந்தம் மதிதயான் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

வித்தியா படுகொலை வழக்கு சிறப்பு நீதிமன்றம் மூலம் துரிதமாக விசாரணை – மைத்திரி உறுதி

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம் ஊடாக துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை – சிறிலங்காவுடனான நட்புவை பாதிக்குமாம்

நட்பு நாடான சிறிலங்காவுடனான உறவுகளைப் பாதிக்கும் என்ற காரணத்தைக் காட்டி, இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்றைச் சித்திரிக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கு இந்திய மத்திய தணிக்கைச் சபை அனுமதி மறுத்துள்ளது.

புதிய தேசிய பாதுகாப்புத் திட்டத்துக்கு வெளிநாட்டு ஆலோசனை – பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் ஆராய்வு

முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபரால் வரையப்படும் புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரிகள், சமூக விரோதிகளை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்றுவேன் – மைத்திரி

போதைப்பொருள் வியாபாரிகளையும், சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தான் கடமைப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரம் – உலகத் தமிழர் பேரவையுடன் தென்னாபிரிக்க அமைச்சர் பேச்சு

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளில் ஒன்றாக உலகத் தமிழர் பேரவையுடன், தென்னாபிரிக்க பிரதி அமைச்சர் நோமான்டியா பெகேட்டோ பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளில் நாளை வித்தியாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நாடெங்கிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், நாளை காலை ஒரு நிமிட அஞ்சலி செலுத்துமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.