மேலும்

சீனாவின் உயர்மட்ட படை அதிகாரிகள் 32 பேர் சிறிலங்காவுக்குப் பயணம்

Chinese_NDU-sl (1)சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்தக் குழுவினர், நேற்று கூட்டுப்படைகளின் தலைமையகம், இராணுவத் தலைமையகம், மேற்கு கட்டளைத் தலைமையகம் உள்ளிட்ட பாதுகாப்புத் தலைமையகங்களுக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  பிரதி அரசியல் ஆணையாளர் லெப்.ஜெனரல் வூ ஜீமிங் தலைமையிலான இந்தக் குழுவில், மூன்று மேஜர் ஜெனரல்கள், 26 மூத்த கேணல்கள், ஒரு லெப்.கேணல் மற்றும் ஒரு சிவிலியன் அதிகாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற இவர்கள், எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலகவையும், இராணுவத் தலைமையகத்தில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவையும், சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

Chinese_NDU-sl (1)

Chinese_NDU-sl (5)Chinese_NDU-sl (3)Chinese_NDU-sl (4)Chinese_NDU-sl (2)

அத்துடன், பனாகொடவில் உள்ள மேற்குப் படைகளின் தலைமையககத்தில், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்புகளின் போது, சிறிலங்கா படைகளின் நிலைகள், செயற்பாடுகள் குறித்து சீன குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை வைத்திருக்கும் சிறிலங்காவுக்கு, அண்மையா நாட்களில் சீனாவில் இருந்து வந்துள்ள மிகப் பெரிய இராணுவக் குழு இதுவேயாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *