மேலும்

பிரிவு: செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் மகிந்த – சீன செய்தி நிறுவனம் தகவல்

சிறிலங்காவில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா வெளியிட்டுள்ளது.

விரிவான தேசிய பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்படுகிறது – படையினர் மத்தியில் மைத்திரி அறிவிப்பு

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதான- விரிவான தேசிய பாதுகாப்புத் திட்டம் ஒன்றை  சிறிலங்கா அரசாங்கம் வகுக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண சம்பவங்கள் – ஒரு எச்சரிக்கை மணி

இளையோர்கள் பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வடக்கில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்குமான அவசியத்தையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

அமெரிக்க விமானப்படை விமானி கொழும்பில் சடலமாக மீட்பு

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில், அமெரிக்க விமானப்படை விமானி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வித்தியா படுகொலை: காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் கடும் நடவடிக்கை

புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நிழல் அமைச்சரவையை அமைத்து ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கிறார் மகிந்த

மீண்டும் அரசியலில் குதிக்கத் தயாராகி வரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிழல் அமைச்சரவை ஒன்றை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிழல் அமைச்சரவையில் 5 முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மாணவி வித்தியாவுக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

புங்குடுதீவில், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுமாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

எனக்கெதிராக மூன்று மாறுபட்ட அரசியல்சக்திகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டன – வி.ரி.தமிழ்மாறன்

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்விருதை வென்றது ‘தீபன்’

பிரான்சில் நேற்றிரவு நடந்த உலகப் புகழ்பெற்ற 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில், முன்னாள் ஈழப்போராளியின் புலம்பெயர் வாழ்வை சித்திரிக்கும் தீபன் திரைப்படம், Palme d’Or  என்ற உயரிய விருதை பெற்றுள்ளது.

நீதிமன்றத் தாக்குதல் குறித்து விசாரிக்க 15 பேர் கொண்ட சிஐடி குழு யாழ். வருகை

யாழ். நீதிமன்றம் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக, சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட விசாரணைக் குழு யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.