ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை
பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூதூர்- மட்டக்களப்பு வீதி புனரமைப்புப் பணிகளை நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு, பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களை நாம் பயன்படுத்துவோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு விமானங்கள் இயங்கத் தொடங்கி விடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
“ தீவிரவாதத்தையும்”, “பயங்கரவாதத்தையும்” ஒடுக்குவதில் உலகளாவிய முன்நிலை வகிக்கத் துடிக்கும் இந்திய பாதுகாப்புப் பிரிவும், இந்தியாவின் மொத்த மூலதனத்தின் 60% தத்தை தம்வசம் வைத்திருக்கும் 3% மான (இந்திய ஜ்னத்தொகையில்) இந்திய முதலாளிகளும் சுலபமாக பயணம் செய்ய வாய்ப்புகள் உருவாகப் போகின்றன.