மேலும்

மைத்திரியைச் சந்திக்கிறார் கோத்தா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக இன்று பெயரிடப்படுவார் என எதிர்பார்க்கப்படும், கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்த வாரம் சந்திக்கவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பை முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இருவரும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணியை உருவாக்குவது குறித்து இந்தச் சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *