மேலும்

‘மொட்டு’ மாநாட்டில் மைத்திரி அணியின் 10 எம்.பிக்கள்

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று நடைபெறும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நடந்த கூட்டணி பேச்சுக்களில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்றைய மாநாட்டில் சுதந்திரக் கட்சியினர் பங்கேள்காமல் ஒதுங்கியிருக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமது கட்சியினருக்கு அறிவித்திருந்தார்.

எனினும், 10 வரையான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தானும்  இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொருளாளரான எஸ்.பி திசநாயக்க தெரிவித்தார்.

டிலான் பெரோ, சரத் அமுனுகம, துனேஸ் கங்கந்த ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *