மேலும்

மாதம்: February 2018

சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இணைந்து இந்தியா பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ள சூழலில், 16 நாடுகளின் கடற்படைகளை இணைத்துக் கொண்டு, இந்தியா பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் மார்ச் 6ஆம் நாள் ஆரம்பித்து, எட்டு நாட்கள் இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தினால் ஐதேகவுக்குள் புகைச்சல்

சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.

ஐ.நா தூதுவர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் வருத்தம்

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் திடீர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நாடகம் – வசந்த சேனநாயக்க விமர்சனம்

சிறிலங்காவில் இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தை நகைச்சுவை நாடகம் என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க விமர்சித்துள்ளார்.

ஐதேக அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் – சட்டம், ஒழுங்கு ரணிலிடம்

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆறு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றனர்.

கச்சதீவில் சிங்களத்தில் ஆராதனை – இந்திய, இலங்கை பக்தர்கள் அதிர்ச்சி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிங்களத்தில் ஆராதனை நடத்தப்பட்டமை குறித்து- விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்கவின் பதவிக்காலம் முடிந்து விட்டதாம் – இனி லண்டன் செல்லமாட்டார்

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பதவிகாலம் முடிந்து விட்டதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பின்னடைவுக்கான காரணத்தை ஆராய கூட்டமைப்பு முடிவு

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக, ஆராய்வதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

திருகோணமலையில் பிரித்தானியர் கால பீரங்கிகள் மீட்பு

திருகோணமலையில் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மேலும் இரண்டு பாரிய பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இலங்கையர் தலையிலும் 417,913 ரூபா கடன்

இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.