மேலும்

ஐதேக அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் – சட்டம், ஒழுங்கு ரணிலிடம்

kabir -ministerசிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆறு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக கபீர் காசிமும், பொது தொழிற்துறை அமைச்சராக லக்ஸ்மன் கிரியெல்லவும், டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக ஹரீன் பெர்னான்டோவும், இளைஞர் விவகார, தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்கவும், நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் அமைச்சராக ரவீந்திர சமரவீரவும் பதவியேற்றுள்ளனர்.

kabir -minister

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ஹர்ஷ டி சில்வாவும், சிறைச்சாலைகள், மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக அஜித் பெரேராவும், இளைஞர் விவகார, தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு விவகார பிரதி அமைச்சர் அலவத்துவலவும் பொறுப்பேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *