ஐ.நா தூதுவர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் வருத்தம்
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் திடீர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு நேற்றுச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப ஏட்டில் கையெழுத்திட்டு, தமது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அத்துடன், ஐ.நா பணியகத்தில் உனா மக்கோலியின் தாயாரைச் சந்தித்த சிறிலங்கா அதிபர், ‘தமது கடமையில் அர்ப்பணிப்பு, புரிந்துணர்வு மற்றும் உணர்வுபூர்வமாக ஈடுபாடு கொண்டவராக உனா மக்கோலி இருந்தார்’ என்றும் தெரிவித்துள்ளார்.