மேலும்

சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு- வவுனியா வளாகம் மூடப்பட்டது

Vavuniya Campusயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, வளாகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் நாள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாளை வவுனியா வளாகத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள் கொண்டாடியிருந்தனர்.

மாணவர் விடுதியில் நடந்த இந்தக் கொண்டாட்டம் பற்றி அறிந்த சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களுடன் முரண்பட்டனர்.

நிலைமைகள் மோசமடைவதை தடுத்து நிறுத்திய வளாக நிர்வாகம், உடனடியாக வளாகத்தை இழுத்து மூடியுள்ளது.

அத்துடன், வளாகத்தின் விடுதியில் தங்கியிருந்த சுமார் 600 மாணவர்களும் நேற்று மாலைக்குள் வெளியேறுமாறு கேட்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *