மேலும்

கொழும்பு வந்தது பாகிஸ்தான் போர்க்கப்பல்

PNS Saifபாகிஸ்தான் கடற்படையின், பிஎன்எஸ் சைய்ப் என்ற போர்க்கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

123 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல், 3,144 தொன் எடை கொண்டது. இதில் 225 பாகிஸ்தான் கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

கொழும்புத் துறைமுகத்தில் பிஎன்எஸ் சைய்ப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர்.

PNS Saif

கொழும்பில் தரித்து நிற்கும் போது, பாகிஸ்தான் கடற்படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

வரும் 8ஆம் நாள் பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *