கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில் சிறிலங்கா இராணுவ மேஜரும் இரு படையினரும் கைது
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஒருவரும், இரண்டு படையினரும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வெளியான தி நேசன் (The Nation) ஆங்கில இதழின் முன்னாள் இணை ஆசிரியரான கீத் நொயார், 2008ஆம் ஆண்டு மே மாதம், கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதை அடுத்து கீத் நொயார் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்ட வந்த நிலையில் சிறிலங்கா இராணுவ மேஜர் புலத்வத்த மற்றும் இரண்டு படையினர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தப் போவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது,