மேலும்

மாதம்: May 2016

சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை பாதியாக வெட்டிக் குறைத்தது இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை, இந்திய நிதியமைச்சு வெட்டிக் குறைத்திருப்பதால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கொடைகள், கடன்களை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மகிந்தவை சித்திரவதை செய்யும் விளையாட்டு செயலி – கூகுளில் அறிமுகம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை சித்திரவதை செய்யும், அன்ட்ரொயிட் விளையாட்டு செயலி ஒன்று, கூகுளில் அறிமுகமாகியிருக்கிறது.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்கா அமைச்சரைச் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், மோனிகா பின்ரோ, நேற்று சிறிலங்காவின் நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா படைத் தளபதிகளுடன் பேச்சு

சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் நேற்று சிறிலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

முன்னாள் போராளிகள் கைதுகளின் பின்னணி என்ன? – சிறிலங்கா அரசிடம் கூட்டமைப்பு கேள்வி

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

சங்கரி, டக்ளஸ், பிரபா புதிய அரசியல் கூட்டணி – முன்னாள் போராளிகள் கட்சியும் இணைவு

ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோர் இணைந்து, ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

பாலித தேவாரப்பெருமவும், பிரசன்ன ரணவீரவுமே மோதல்களுக்கு காரணம்- விசாரணைக்குழு அறிக்கை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமான, ஐதேக உறுப்பினர் பாலித தேவாரப்பெரும மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தலையில் படுகாயங்களுடன் மேஜர் ஜெனரல் மானவடு கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியான, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவுக்கு எதிராக, ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை நிராகரித்தது மேல் மாகாணசபை

வடக்கு-கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்து, சமஸ்டி ஆட்சி அலகு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரி, வடக்கு மாகாணசபையில் நிறைவேற்ப்பட்ட தீர்மானத்தை, மேல்மாகாணசபை நிராகரித்துள்ளது.