மேலும்

நாள்: 5th May 2016

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான சிறிலங்கா இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா இன்று இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

அடுத்தவாரம் பிரித்தானியா, இந்தியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு  அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கோத்தாவின் திடீர் அமெரிக்கப் பயணத்தின் இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

தான் அமெரிக்காவிற்குச் சென்றால் அங்குள்ள புலி ஆதரவு அமைப்புக்கள் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஒருதடவை கோத்தபாய தெரிவித்திருந்தார். அமெரிக்கச் சிறையில் அடைக்கப்படுவதை விட சிறிலங்காவில் இருப்பது சிறந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மோதலில் ஈடுபட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரகாலம் இடைநிறுத்தம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில், பிரதி அமைச்சர் பாலித தேவாரப்பெருமவும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவும், ஒரு வாரகாலம் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் மானவடுவுக்கு 3 மணி நேர சத்திரசிகிச்சை

சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுத் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவுக்கு  நரம்பியல் நிபுணரின் உதவியுடன் மூன்று மணிநேர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு நிறுவன உதவியுடன் திருகோணமலையில் பெருநகர திட்டமிடல் ஆய்வு

திருகோணமலைப் பெருநகரப் பிரதேசத்தில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் திட்டமிடல் மீளாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை பாதியாக வெட்டிக் குறைத்தது இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை, இந்திய நிதியமைச்சு வெட்டிக் குறைத்திருப்பதால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கொடைகள், கடன்களை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மகிந்தவை சித்திரவதை செய்யும் விளையாட்டு செயலி – கூகுளில் அறிமுகம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை சித்திரவதை செய்யும், அன்ட்ரொயிட் விளையாட்டு செயலி ஒன்று, கூகுளில் அறிமுகமாகியிருக்கிறது.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்கா அமைச்சரைச் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், மோனிகா பின்ரோ, நேற்று சிறிலங்காவின் நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா படைத் தளபதிகளுடன் பேச்சு

சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் நேற்று சிறிலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.