மேலும்

நாள்: 6th May 2016

தமிழ்நாட்டில் அமையுமா கூட்டணி ஆட்சி?

தமிழகத் தேர்தல் களத்தில் இன்றைக்கு உரத்து ஒலிக்கும் முக்கியமான கோரிக்கை, கூட்டணி ஆட்சி. ஆளுங்கட்சியான அதிமுக அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. திமுகவோ அதற்கான வாய்ப்பை அடியோடு நிராகரிக்கிறது. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தரப்போ கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஆகச் சிறந்த நிவாரணி என்கிறது.

யோசித ராஜபக்ச உகண்டா செல்வதற்கு கடுவெல நீதிமன்றம் தடை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச உகண்டா செல்வதற்கு, கடுவெல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மேஜர் ஜெனரல் மானவடு இறந்த செய்தி அறிந்ததும் அவரது இல்லத்துக்கு ஓடினார் மகிந்த

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமான செய்தியைக் கேள்வியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உடனடியாக, அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.

அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய 12 அகதிகளும் கட்டுநாயக்கவில் கைது

கொகோஸ் தீவில் இருந்து அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட 12 அகதிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

படுகாயமடைந்திருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்று காலை மரணம்

சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (55 வயது) இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமானார்.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவம் பிரியாவிடை

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்றக் குழு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கும் இடையிலான, ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

வவுனியா ஜோசப் இராணுவ முகாமுக்குள் நுழைந்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சோதனை

சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர் விபத்தில் மரணம்

மட்டக்களப்பு- வாழைச்சேனையில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், உந்துருளி விபத்தில் மரணமானார். இந்தச் சம்பவம் கடந்த மாதம் 29ஆம் நாள் இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொகோஸ் தீவு வந்த சிறிலங்கா அகதிகளை இரகசியமாகத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

சிறிலங்காவில் இருந்து அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த அகதிகள், இரவோடிரவாக இரகசியமான முறையில், விமான மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.