மேலும்

சங்கரி, டக்ளஸ், பிரபா புதிய அரசியல் கூட்டணி – முன்னாள் போராளிகள் கட்சியும் இணைவு

sangari-douglasஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோர் இணைந்து, ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக, கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே இந்த அரசியல் கூட்டணி உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டணியில், அண்மைய நாடாளுமன்றத் தேர்தலின் போது, உருவுாக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் கட்சியான, ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட 10 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்துள்ளன.

தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலை அமைப்பு, தமிழ் மக்கள் அமைப்பு, ஈழப் புரட்சி அமைப்பு, சர்வதேச இந்து குருமார் சங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, சிறி ரெலோ, ஜனநாயகத்திற்கான மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 10 அமைப்புகள் மற்றும் கட்சிகளே இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளளன.

2 கருத்துகள் “சங்கரி, டக்ளஸ், பிரபா புதிய அரசியல் கூட்டணி – முன்னாள் போராளிகள் கட்சியும் இணைவு”

  1. puviraj says:

    மீண்டும் தமிழர்களுக்கு சமாதி கட்டுவதற்கு அத்திவாரம் வெட்டப்பட்டுள்ளது இதற்கான பொருளா????????தாரம் கிடைத்தவழி மக்களுக்கு நன்றாக தெரியும் புதிய சகுனிகளின் பகடையாட்டம் எப்படி பார்ப்போம்

  2. Sivasoma says:

    இவர்களுள் ஒருவர் அடாவடி அரசியல் வியாதி அடுத்தவர் ஜனாதிபதிகளுக்கு கடிதம் எழுதுவதையே தனது முழுநேர வேலையாக செய்பவர்.இவர்களும் இவர்களது கட்சிகளும் தமிழினத்துக்கு செய்தவை மக்கள் அறியாதவை அல்ல. மந்திரியாய் இருந்து சுகபோகம் அனுபவிப்பதற்காக ஜனாதிபதியை நம்பும் இந்நபர் அரசியல் அமைப்பின் 18ஆவது சட்டத்திருத்தத்துக்கு அரசுக்கு ஆதரவளித்து தனது அறியாமையை வெளிப்படுத்தியவர் இவர் பின்னால் அலையும் அடிப்பொடிகளும் அவர்வழியையே தொடர்கின்றனர். சிறுபான்மையினரது உரிமைகள் மறுக்கப்படுவதற்கு இவர்களது சிங்கள அடிவருடித்தனமும் முஸ்லிம் கட்சிகளின் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளும் பெரிதும் காரணமாய் அமைகின்றன. ஐயா சங்கரியாரும்,அடாவடி டக்ளசும் எத்தனை உதிரிகளை இணைத்து கூட்டணி அமைத்தாலும் அவர்கள் அடையப்போகும் நன்மை இலங்கை அரசால் போடப்படும் எலும்புத்துண்டுகளே. தமிழ் மக்கள் இவர்களை நிராகரித்து வெகு காலம் ஆகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *