மேலும்

நாள்: 7th May 2016

உகண்டா அதிபரின் பதவியேற்பு விழாவுக்குச் செல்கிறார் மகிந்த

உகண்டாவின் நீண்டகால ஆட்சியாளரான யொவேரி முசவேனியின், ஐந்தாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி

புதிதாகத் தாம் உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணி சமஸ்டித் தீர்வை நிராகரிக்கும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு எல்லையில் காடுகள் அழிக்கப்பட்டு பாரிய சிங்களக் குடியேற்றத்துக்கு திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில், சிங்களவர்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சிங்களக் குடியேற்றம் ஒன்று நிறுவப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் திட்டமிட்ட வாழ்வியல் சீரழிப்பு – தடுப்பதற்கு ஒன்றிணையுமாறு யாழ். ஆயர் அறைகூவல்

வடக்கில், குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வன்முறைகள், மற்றும் கலாசார சீரழிவுகள் திட்டமிட்ட வாழ்வியல் சீரழிப்பா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள, யாழ். ஆயர், இந்த நிலையை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பினரும், ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் முற்றாக கையளிக்கப்படாது

அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றாகவே சீனாவிடம் கையளிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களை, சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை தலைவர் தம்மிக ரணதுங்க நிராகரித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வுக்குச் செல்கிறார் சந்திரிகா

நியூயோர்க்கில் எதிர்வரும், 10ஆம் ,11ஆம் நாள்களில் நடக்கவுள்ள ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வில் சிறிலங்காவின் சார்பில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவுள்ளார்.

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஜெனிவா அமர்வில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 109ஆவது அமர்வில் அமர்வில், சிறிலங்கா தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் நான்கு மேஜர் ஜெனரல்கள் பசில் ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பு

சிறிலங்கா இராணுவத்தில் சேவையில் உள்ள நான்கு மேஜர் ஜெனரல்களும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக, ராவய சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

நைஜீரியாவுக்கு 9 ரோந்துப் படகுகளை விற்பனை செய்தது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படை உள்நாட்டில் தயாரித்த, ஒன்பது கரையோர ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்பனை செய்துள்ளது. வெலிசறையில் உள்ள படகு கட்டுமான தளத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில், நைஜீரியத் தூதுவர், அகமட்டிடம், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளால் இந்தப் படகுகள் கையளிக்கப்பட்டன.

சிறிலங்கா மீதான தடையைத் தளர்த்தியது அமெரிக்கா

சிறிலங்கா மீதான நீண்டகால இராணுவத் தளபாட வர்த்தகத் தடையை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.