மேலும்

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்கா அமைச்சரைச் சந்திப்பு

UN-Raporter-wejedasaசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், மோனிகா பின்ரோ, நேற்று சிறிலங்காவின் நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பிலுள்ள புத்தசாசன அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நீதிபதிகள் மற்றம் சட்டவாளர்களின் சுதந்திரத்துக்கான ஐ.நா அறிக்கையாளர், மோனிகா பின்ரோவுடன், அவரது குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

UN-Raporter-wejedasa

சிறிலங்காவின் நீதித்துறை சுதந்திரம் தொடர்பாக ஆராயவே இந்தக் குழுவினர் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை, சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் மற்றும் தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான ஜுவான் பெரான்டோவும், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *