மேலும்

மாதம்: May 2016

பனாமா ஆவணங்கள் – குற்றச்சாட்டை மறுக்கிறார் மேஜர் நிசங்க சேனாதிபதி

வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தாம், வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கவில்லை என்று மறுத்துள்ளார் அவன்ட் கார்டே பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி.

மகிந்த மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை – சிறிலங்கா சுதந்திரக் கட்சி குத்துக்கரணம்

கிருலப்பனையில் நடந்த கூட்டு எதிரணியின் மேநாள் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காது என்று, அந்தக் கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தாஜுதீன் கொலை – மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மூன்று மணிநேரம் விசாரணை

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம், மூன்று மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நாளை உகண்டா செல்கிறார் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாளை உகண்டாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, அவரது ஊடகப் பி்ரிவு அறிவித்துள்ளது.

லலித் அத்துலத்முதலியின் படுகொலை குறித்து மீள் விசாரணை செய்யக் கோருகிறார் சகோதரர்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் படுகொலை தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அவரது சகோதரர் தயந்த அத்துலத்முதலி கோரிக்கை விடுத்துள்ளார்.

“என்னையும் மகிந்தவையும் திருக்கை வாலினால் அடிக்க வேண்டும்” – என்கிறார் கோத்தா

சரத் பொன்சேகாவை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக, தன்னையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், திருக்கை வாலினால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

நாமல், யோசிதவிடம் தொடங்கியது விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன்களான நாமல் ராஜபக்சவிடமும், யோசித ராஜபக்சவிடமும், இன்று காலை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களுடன் மைத்திரி இன்று அவசர சந்திப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் 10பேருடன், கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

நீண்டநேரம் உரையாடிய மைத்திரி – சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடன் நேற்று நீண்டநேரமாக கலந்துரையாடினார்.

உலக வங்கியின் கறுப்புப்பட்டியலில் உள்ள சீன நிறுவனத்துடன் சிறிலங்கா அரசு உடன்பாடு

கொழும்பு துறைமுக நகரக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும், சீன நிறுவனம், உலக வங்கியால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.