நாளை உகண்டா செல்கிறார் மகிந்த ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாளை உகண்டாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, அவரது ஊடகப் பி்ரிவு அறிவித்துள்ளது.
உகண்டாவின் அதிபர் யொவேரி முசவேனி ஐந்தாவது முறையாக அதிபராகப் பதவியேற்கவுள்ள, நிகழ்வில் பங்கேற்கவே, மகிந்த ராஜபக்ச அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க மகிந்த ராஜபக்சவுக்கு, யொவேரி முசவேனி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.