மேலும்

நாமல், யோசிதவிடம் தொடங்கியது விசாரணை

namal-yoshitha (1)சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன்களான நாமல் ராஜபக்சவிடமும், யோசித ராஜபக்சவிடமும், இன்று காலை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கால்ட்டன் விளையாட்டு வலையமைப்பில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, லெப்.யோசித ராஜபக்சவை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று விசாரணைக்கு அழைத்திருந்தது.

அதுபோன்று, சிறிலங்கா விமானப்படை விமானங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழு இன்று விசாரணைக்கு அழைத்திருந்தது.

இந்த அழைப்புகளின் பேரில், மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களான நாமல் ராஜபக்சவும், யோசித ராஜபக்சவும், இன்று விசாரணைகளுக்கு முன்னிலையாகினர்.

இவர்களிடம், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *