மேலும்

நீண்டநேரம் உரையாடிய மைத்திரி – சம்பந்தன்

MS-Sampanthanசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடன் நேற்று நீண்டநேரமாக கலந்துரையாடினார்.

கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் விடுதியில் நேற்றுக்காலை நடந்த, அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் புதல்வரின் திருமண விழாவிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த திருமண விழாவில், இரா.சம்பந்தன் உள்ளிட்ட,பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தனது மனைவியுடன் திருமணத்துக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தனுக்கு அருகில் அமர்ந்து கொண்டார்.

அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்து நீண்டநேரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *