மேலும்

சிறிலங்கா மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

eu-flagசிறிலங்கா மீதான கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதி தடையை நீக்குவதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்குவதற்கு, நீண்ட கலந்துரையாடல்களின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வெற்றிகரமாக, தமது மீன்பிடித்தல் முறைகளில் மறுசீரமைப்புச் செய்துள்ளது.  இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கடலுணவு ஏற்றுமதித் தடை நீக்கப்படுகிறது என்று ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 2015 பெப்ரவரி மாதம் தொடக்கம், கடலுணவுப் பொருள் ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *