மேலும்

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சந்திரிகா

modi-chandrikaசிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இன்று சந்தித்தார். புதுடெல்லியில் இன்று ஆரம்பமான அனைத்துலக இந்து- பௌத்த மாநாட்டின் போதே,  இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பாஜக ஆதரவு விவேகானந்தா அனைத்துலக நிறுவகம், ரோக்கியோ பவுண்டேசன், அனைத்துலக பௌத்த சம்மேளனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாட்டை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.

modi-chandrika

இந்த மாநாட்டில் சிறிலங்கா, தாய்லாந்து, மொங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *