எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த ஒரே நாடு சிறிலங்கா – மேஜர் ஜெனரல் உதய பெரேரா
எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த அனுபவத்தைக் கொண்ட ஒரே நாடாக சிறிலங்கா விளங்குவதாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சிறிலங்கா இராணுவம் நடத்திய இரண்டு நாள் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று, உரையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா,
“கடந்த நூற்றாண்டில் தீவிரவாதம் தனது பழைய முகங்களை மாற்றியுள்ளது.
தீவிரவாதத்தின் ஐந்தாவது அலையைத் தடுத்து நிறுத்த, அனைத்துலக சமூகம் ஒன்றுபட வேண்டும்.
தீவிரவாதம் அடுத்ததாக, நாகரீகங்களின் மோதலாக உருவெடுக்கும் ஆபத்து உள்ளது.
தீவிரவாதம், பல்வேறு அலைகளாக மாறியிருக்கிறது. முன்னர் குடியேற்றவாதம், மாக்சிசம் பின்னர், இனத்துவம், பிராந்தியவாதம் என்று அது வேறுபட்ட முகங்களைக் கொண்டதாக மாறியிருக்கிறது.
இப்போது நாம் நாகரீகங்களின் மோதல்களை காண்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.