மேலும்

Archives

கனகபுரம் துயிலுமில்ல புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை மீளமைப்பதற்கான பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச்  செயலகத்துக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்தகைய நிலையில், கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி அது.

93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுக்கள் கோரப்படும் – தேர்தல் ஆணையம் முடிவு

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளுக்காக மீளுயிர் பெறும் துயிலுமில்லங்கள்

தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது.

சுஸ்மாவைச் சந்தித்து விட்டு கொழும்பு திரும்பினார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கூட்டுமுயற்சித் திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் – சிறிலங்கா பிரதமரிடம் வலியுறுத்தினார் மோடி

சிறிலங்காவில் இந்தியாவின் கூட்டு முயற்சித் திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ராகுல், மன்மோகனுடன் இணைந்து ரணிலைச் சந்தித்தார் சோனியா

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, காங்கிஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் – ராம்நாத் கோவிந்த்

உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதியளித்துள்ளார்.

மோடியைச் சந்தித்தார் ரணில்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

56 சீன படையதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பெரியதொரு இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.