சுஸ்மாவைச் சந்தித்து விட்டு கொழும்பு திரும்பினார் ரணில்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமரை இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று காலை சந்தித்தார்.
புதுடெல்லி சிறிலங்கா பிரதமர் தங்கியிருந்த தாஜ் பலஸ் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இருதரப்பு உறவுகளுடன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறிலங்கா பிரதமர் இன்று பிற்பகல் கொழும்பு திரும்பியுள்ளார்.