ராகுல், மன்மோகனுடன் இணைந்து ரணிலைச் சந்தித்தார் சோனியா
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, காங்கிஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் சிறிலங்கா பிரதமர் தங்கியிருந்த விடுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சோனியா காந்தியுடன், ராகுல் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா ஆகியோரும் சிறிலங்கா பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்தத் தகவல்களும் கசிய விடப்படவில்லை.