மேலும்

Archives

சிங்கப்பூர்- சிறிலங்கா இடையே சுதந்திர வர்த்தக உடன்பாடு கைச்சாத்து

சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்  அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது என்றுமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமருக்கு சிறிலங்காவில் வரவேற்பு

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று மாலை சிறிலங்காவை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிங்கப்பூர் பிரதமரை, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் – உறவுகளை பலப்படுத்தப் போகிறாராம்

சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள செங் சுவேயுவான் நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், சீன- சிறிலங்கா நட்புறவுச் சங்கப் பிரதிநிதிகள், சீன தொழிற்துறை மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

சிறிலங்காவும் ரஷ்யாவும் அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து பேச்சு

அமைதித் தேவைக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக, ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக சிறிலங்காவும் ரஷ்யாவும் பேச்சுக்களை நடத்தியுள்ளன.

சிறிலங்கா அதிபர், பிரதமருடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஜாவிட் பஜ்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தது

ஞாநி நாடறிந்த மூத்த பத்திரிகையாளர். எதையும் எவர் முன்னும் நேர்படப்பேசும் மனத் திண்மை பெற்ற மனிதராக இதழியல் துறையில் இயங்கி வருபவர். அவரது ஓ  பக்கங்களுக்கென்று தனித்த வாசகர் வட்டம் உண்டு. அப்பக்கங்களின் வெக்கை தாளாமல் சில இதழ்கள் வெளியிட மறுத்த வரலாறும் உண்டு. தீம்தரிகிட,  தினமணி கதிர் உள்ளிட்ட சில இதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலும் பணியாற்றியவர்.

சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஜாவிட் பஜ்வா நேற்று சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் – உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டு, உயர்மட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் தகவல் தொழில்நுட்பத் துறை அபிவிருத்திக்கு இந்தியா உதவும்

தகவல் தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்வது மற்றும் புதிய போக்குகளை அடையாளம் காண்பதற்கு சிறிலங்காவுக்கு இந்தியா உதவும் என்று இந்திய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார்.