சிங்கப்பூர்- சிறிலங்கா இடையே சுதந்திர வர்த்தக உடன்பாடு கைச்சாத்து
சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இந்த உடன்பாட்டில் சிறிலங்காவின் சார்பில் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், சிங்கப்பூரின் சார்பில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர், சிங்கப்பூர் பிரதமர், சிறிலங்கா பிரதமர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிங்கப்பூர் பிரதமருக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.