மேலும்

கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் – உறவுகளை பலப்படுத்தப் போகிறாராம்

Cheng Xueyuanசிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள செங் சுவேயுவான் நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், சீன- சிறிலங்கா நட்புறவுச் சங்கப் பிரதிநிதிகள், சீன தொழிற்துறை மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

சிறிலங்காவுக்கான சீனாவின் 21 ஆவது தூதுவராக செங் சுவேயுவான் பொறுப்பேற்கவுள்ளார்.

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிய ஷி ஷியான்லியாங் அண்மையில் தமது பணிக்காலம் முடிந்த நாடு திரும்பியதை அடுத்து, புதிய தூதுவராக செங் சுவேயுவான் பொறுப்பேற்கவுள்ளார்.

Cheng Xueyuan -colombo

தாம் சிறிலங்கா- சீன உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, உறுதிப்பாடு, செழிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலும், பணியாற்றப் போவதாகவும் செங் சுவேயுவான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *