மேலும்

Tag Archives: கடற்படை

சிறிலங்கா துறைமுகங்களை பயன்படுத்த வெளிநாட்டுப் படைகளுக்கு அனுமதி இல்லை – ரணில் உறுதி

ஏனைய நாடுகளின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும் பயன்படுத்த வெளிநாட்டுப் படைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் மேலும் திருத்தங்கள் செய்ய முயற்சி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் மேலும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை அகற்ற முடியாது – சிறிலங்கா பிரதமர்

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்பதால், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பற்றியெரியும் கொள்கலன் கப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம்

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீயை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்தியா கடற்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை, சிறிலங்கா விமானப்படை என்பன கூட்டாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

சீனாவுடனான நட்பினால் இந்தியாவை இழக்கமாட்டோம் – சிறிலங்கா பிரதமர்

சீனாவுடனான சிறிலங்காவின் நட்பு, இந்தியாவை இழக்கச் செய்து விடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா

விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கு – விடுவிக்கப்பட்ட 3 கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்க சிஐடிக்கு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா- அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் மீண்டும் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘மரைன்’ பற்றாலியனுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கே அமெரிக்க கடற்படையின் ‘மரைன்’ படைப்பிரிவினருடன், ‘யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்’ என்ற தரையிறக்க கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குச் சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பல்

இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக்  நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானம்

கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.