மேலும்

Tag Archives: கடற்படை

8 இலங்கை மாலுமிகளுடன் எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது

சிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவ செயற்பாடுகளுக்கு தடை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்பாடு, துறைமுகத்தை இராணுவ நோக்கில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் இளைஞர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பில் தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் கடத்திக் கொலை – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது

கொழும்பில் ஆறு மாணவர்களைக் கடத்தி கப்பம் கோரி, கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மரைன் படைப்பிரிவு பிரதி தளபதி சிறிலங்காவில் – உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவின் பிரதிக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கவனோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் போர்க் கல்லூரியில் கடற்புலிகள் குறித்து பாடம் நடத்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி

பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லூரியில் கடற்புலிகள் தொடர்பாகவும், அவர்களின் எழுச்சி வீழ்ச்சி தொடர்பாகவும் விரிவுரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன.

சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தமிழர்களை கடத்திய சிறிலங்கா கடற்படை புலனாய்வு பணிப்பாளர் விரைவில் கைது

கொழும்பில் இரண்டு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகே உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

அமெரிக்க நாசகாரி கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள யுஎஸ்எஸ். ஹொப்பர் என்ற அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பலில், சிறிலங்கா கடற்படையினருக்கு நேற்று பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தமிழர்களை கடத்தி காணாமற்போகச் செய்த கடற்படை உயர் அதிகாரிக்கு விளக்கமறியல்

கொழும்பில் இருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் மாபா முதியான்சலாகே தம்மிக அனில மாபாவை ஜனவரி 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.