மேலும்

நாள்: 23rd April 2026

இணைய ஊடுருவிகளிடம் சிக்கிய 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம்

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து, முன்னெடுத்த நிதித் திருட்டு தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு- குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

காணாமல் போன 2.5 மில்லியன் ரூபா பணம்- விசாரிக்க 5 பேர் கொண்ட குழு

அவுஸ்ரேலிய கடனுக்கான தவணையாகக் கொடுப்பனவாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் காணாமல் போனது குறித்து விசாரிக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது.

நீதிவானிடம் சாட்சியமளிக்க சுரேஷ் சாலே விருப்பம்- ஒரு மாத அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவை, கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா நீடித்து உத்தரவிட்டுள்ளார்.