மேலும்

Tag Archives: கடற்படை

அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவினால் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி

அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினால், சிறிலங்கா கடற்படையினருக்கு திருகோணமலையில் வைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ் பலன்ஸ் ஸ்ரைல் 2017/1 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சீன கடற்படை உயர் அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

சீன கடற்படையின் உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இரண்டு கப்பல்களில் உதவிப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா

சிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

சிறிலங்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 91 பேருக்கு மேல் பலி

சிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 91 பேருக்கு மேல் பலியானதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தில் கனேடியப் போர்க்கப்பல்

கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எச்எம்சிஎஸ் வின்னிபெக் HMCS Winnipeg (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படைப் போர்க்கப்பலே சிறிலங்காவுக்கு பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது மற்றொரு பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சுல்பிகார் என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் படகு கவிழ்ந்து விபத்து – அதிகாரியைக் காணவில்லை

மன்னார்- அரிப்பு கடல் பகுதியில் சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்படை அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கான இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி நீரில் மூழ்கிப் பலி

இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சிறிலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்

‘எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர்.  எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம்.