மேலும்

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – இரண்டு வாரங்களில் முடிவு

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்று இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருப்பி அழைக்கப்படும் 27 தூதுவர்களில் முன்னாள் படைத்தளபதிகளும் நால்வர்

அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட, 27 பேரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.

மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்துப் பேச பிரசெல்ஸ் செல்கிறார் மங்கள சமரவீர

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதிக்கு சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள தடையை பிற்போடக் கோரும் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை பிரசெல்ஸ் செல்லவுள்ளார்.

போர்க்குற்ற விசாரணை குறித்துப் பேச சிறப்புத் தூதராக ஜெனிவா செல்கிறார் ஜயந்த தனபால

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா அதிபரின் மூத்த வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நாளை ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார்.

“கோத்தாவின் வங்கிக்கணக்கு அரசியலமைப்பு மீறல்” – முன்னாள் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம்

அரசாங்கப் பணத்தை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் தனியான கணக்கில் வைத்திருந்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சி.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் மீது தீவிர கண்காணிப்பு – ஒபாமாவைக் குறிவைக்கலாம் என எச்சரிக்கை

இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கா அதிபர் ஒபாமாவை சிறிலங்காச் சேர்ந்தவர் குறிவைக்கலாம் என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஊழலை ஒழிக்க சீனாவின் பொருளாதாரத் தலையீட்டை குறைக்க வேண்டியுள்ளது – சிறிலங்கா

சிறிலங்காவில் ஊழலை ஒழிப்பதற்காக சீனாவின் பொருளாதாரத் தலையீடுகளை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் – ரணில்

சிறிலங்காவில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்ட தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,  புதிய நாடாளுமன்றத்தில் வடக்கில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவுக்கு நெருக்கமான 29 இராஜதந்திரிகளை நாடு திரும்ப உத்தரவு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தூதுவர்களாகவும், இராஜதந்திரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ள 29 பேரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.