ராஜபக்ச குடும்பத்தின் வாரிசுக்கும் வேட்புமனு நிராகரிப்பு
ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவுக்கு, எதிர்வருமு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் மெதமுலான இல்லத்தில் கடந்த ஜூலை 1ஆம் நாள் நடந்த மகிந்த ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச, தாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொனராகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார்.
எனினும், இம்முறை மொனாராகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவில் அவரது பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
அதேவேளை, அவரது தந்தை சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்ட முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நிறுத்தப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.