மேலும்

சிறிலங்கா- சீன கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவு

silkroad-ex (7)சிறிலங்கா- சீன கொமாண்டோக்கள் இணைந்து நடத்தி வந்த பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வு நேற்று மாதுறுஓயாவில் உள்ள சிறப்புப்படைப் பிரிவு பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சீன ஆயுதக் காவல்படையின் 43 கொமாண்டோக்கள், லெப்.கேணல் கியூய் கியாங் தலைமையில் சிறிலங்கா இராணுவக் கொமாண்டோக்களுடன் இணைந்து கடந்த ஜூன் 22ஆம் நாள் இந்தக் கூட்டுப் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தனர்.

மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தக் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.

silkroad-ex (1)

silkroad-ex (2)silkroad-ex (3)silkroad-ex (4)silkroad-ex (5)silkroad-ex (6)silkroad-ex (7)

நேற்றைய நிறைவு நாள் நிகழ்வில், சீன- சிறிலங்கா கொமாண்டோக்கள் பயிற்சி சாகசங்களை சிறப்பு விருந்தினர்கள் முன்பாக நிகழ்த்திக் காட்டினர்.

அத்துடன், பயிற்சி பெற்ற கொமாண்டோக்களுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதியும், சீனத் தூதுவரும் சான்றிதழ்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *