மேலும்

போட்டியில் இருந்து விலகினார் அனந்தி

ananthiநாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குப் போட்டியிட இடமளிக்கவில்லை என்றும், யாழ் மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளதாகவும் பிபிசிக்கு அனந்தி சசிதரன் செவ்வி அளித்திருந்தார்.

அத்துடன் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி, வேட்புமனுத் தாக்கலுக்கான படிவங்களையும் பெற்றுச் சென்றிருந்தார்.

எனினும், இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில், அனந்தி சார்பில் வேட்புமனு சமர்ப்பிக்கப்படவில்லை.

அவர் இறுதி நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் அதற்கான காரணம் தெரியவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *