மேலும்

பிரிவு: செய்திகள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்- வயது 43) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மகரகம மருத்துவமனையில் மரணமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வீடமைப்புத் திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறார் கிளிநொச்சி பங்குத் தந்தை

இந்திய வீடமைப்புத் திட்ட உதவிகளைப் பெறுவதில் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக, தாம் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் அதிகாரிகளுக்குப் பலமுறை கடிதங்களை அனுப்பியதாக, கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க பாகிஸ்தானுடன் போட்டியில் இறங்கியது இந்தியா

சிறிலங்காவுக்குப் போர் விமானங்களை விற்பதற்கான போட்டியில், இந்தியாவும் இணைந்து கொண்டிருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – விசாரணைகள் நிறைவு

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில், இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியத் தூதரகமும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து நடத்திய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

60 அரசியல் கைதிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விடுதலை?

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுமார் 60 அரசியல் கைதிகள், அடுத்த மாதம் முற்பகுதியில் விடுவிக்கப்படுவார் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தவர் என்ற அனைத்துலக மட்டத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர்.

ஐ.நாவுக்கான தூதரகத்துக்கு இராணுவ ஆலோசகரை சிறிலங்கா நியமித்தது ஏன்?

ஐ.நாவில் சிறிலங்காவின் அமைதிகாப்பு முயற்சிகளை ஒருக்கிணைக்கவே, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில், புதிதாக இராணுவ ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார முதலீடுகள் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் ரணில் பேச்சு

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த நாட்டின் பிரதமர் லீ சென் லூங் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்

தம்மை பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம், சிறிலங்கா அதிபரின் உறுதிமொழியை அடுத்து இன்று தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் வாக்குறுதியை அரசியல் கைதிகள் நிராகரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்துக்கு அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் தீர்வு காண்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள வாக்குறுதியை ஏற்க, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.