அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்குத் தீர்வு- மைத்திரி வாக்குறுதி
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அடுத்தமாதம் 7ஆம் நாளுக்கு முன்னதாக நிரந்தர தீர்வு காணப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.


