மேலும்

பிரிவு: செய்திகள்

அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்குத் தீர்வு- மைத்திரி வாக்குறுதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக  அடுத்தமாதம் 7ஆம் நாளுக்கு முன்னதாக நிரந்தர தீர்வு காணப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

33 அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி – மேலும் பலரின் நிலை மோசம்

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலும் 12 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கைதிகளின் எண்ணிககை 33 ஆக அதிகரித்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று பரவலான போராட்டங்கள்

தமது விடுதலையை வலியுறுத்தி, சிறிலங்காவில் உள்ள 14 சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் 217 அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், நேற்று பரவலாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

விசாரணைப் பொறிமுறை குறித்து ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

மகசின் சிறையில் உண்ணாவிரதம் இருந்த 8 அரசியல் கைதிகள் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதி

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில், எட்டுப் பேர் நேற்றிரவு உடல் நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் இராணுவ ஆலோசகராகிறார் மேஜர் ஜெனரல் உபய மெடவெல

சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் படைகளின் தலைமையகத் தளபதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் உபய மெடவெல, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் சென்றார் ரணில் – பொருளாதார முதலீடுகளை பெறுவதே திட்டம்

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் போது, அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் அவர் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.

ரவிராஜ் படுகொலை தொடர்பாக கருணாவிடம் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மகிந்தவின் எதிர்ப்பினால் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தரப்பு சட்டவாளர்கள் தெரிவித்த எதிர்ப்பினால், அவரிடம் இன்று நடத்தப்படவிருந்த விசாரணைகள் நாளைக்குப் பிற்போடப்பட்டுள்ளன.

அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் வாக்குறுதியை ஏற்க அரசியல் கைதிகள் மறுப்பு

சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், தமிழ் அரசியல் கைதிகளுடன் பேச்சு நடத்தினார்.