மேலும்

பிரிவு: செய்திகள்

பிள்ளையானின் சகா பிரசாந்தனும் கைது – இரட்டைப் படுகொலை வழக்கில் சிக்கினார்

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலருமான பூ.பிரசாந்தன், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா படையினரைத் தண்டிக்கக் கூடாது – ஒரேகுரலில் சிங்களக் கட்சிகள்

ஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளும், சிறிலங்கா படையினரைத் தண்டிக்கக் கூடாது என்று சிங்களக் கட்சிகளும், நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தின.

ஜெனிவா தீர்மானம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் – யோசனைகளை சமர்ப்பிக்க காலஅவகாசம்

ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவை சிங்கள நாடாக உருவாக்க முயன்றால் தமிழீழம் உருவாகும் – மாவை எச்சரிக்கை

சிறிலங்காவைத் தனிச் சிங்கள நாடாக மாற்ற முயற்சித்தால், தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது போகும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

பிள்ளையானுக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு பிரதம நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது – அல் ஹுசேன்

சிறிலங்கா தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் – ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக்

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு ஐ.நா தொடர்ந்து, அழுத்தம் கொடுக்கும் என்று, ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்த டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையை வெளியிடப் போகிறாராம் கம்மன்பில

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டெஸ்மன்ட் டி சில்வா சமர்ப்பித்த  அறிக்கையை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள், சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காவிடின், தான் அதனை வெளியிடுவேன் என்று எச்சரித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

விசாரணையில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பது அரசியலமைப்பு மீறல் – என்கிறார் மகிந்த

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான  விசாரணைகளில், வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை – சுமந்திரன்

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட விடயங்களும் தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.