சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் – ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக்
போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு ஐ.நா தொடர்ந்து, அழுத்தம் கொடுக்கும் என்று, ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து. சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்.
நிச்சயமாக நாம் எப்போதும், பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். தொடர்ந்தும் அதற்கு அழுத்தம் கொடுப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.